Thursday, December 31, 2009

தனியே தன்னந்தனியே..!

http://www.nilacharal.com/ocms/log/10260910.asp

நீங்கள் இளகிய மனம் உடையவராகவோ அல்லது வீட்டில் தனியே அமர்ந்து நிலாச்சாரலைப் படிப்பதாகவோ இருந்தால் தயவு செய்து இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். உங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நான் பொறுப்பில்லை!!

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் சென்னையில் இருந்தாலோ அல்லது நீங்கள் சென்னைவாசியாக இருந்தாலோ, நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய விஷயம் இது. முக்கியமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே வசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது!!

சில நாட்களுக்கு முன் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு என் வீடு இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பஸ் ஸ்டாப்பில் நான் இறங்கியபோது மணி நள்ளிரவு 12.

பஸ் ஸ்டாப்பிலிருந்து என் வீட்டிற்கு சுமார் அரை மைல் நடக்க வேண்டி இருந்தது. திகில் படத்தில் இருப்பது போல மிரட்டும் இரவில், வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே, பயத்துடன் நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் போனதும் ஒரு வயதான முதியவர் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பல நாள் தாடியுடனும் பெரிய சிவந்த விழிகளுடனும் பயங்கரத் தோற்றத்தில் இருந்த அவரைப் பார்த்ததும் பயம் மேலும் அதிகரித்தது.

பாட்டி சொன்ன பேய்க் கதைகளும், படித்துத் தெரிந்து கொண்ட பிசாசுகளும் நேரங்கெட்ட நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைத்தன. முதியவர் என்னைப் பார்க்கும் முன் எதிர் சந்தில் ஓடிவிடலாம் என நினைக்கையில், அந்த முதியவர் என்னை அழைத்தார்.

“ஏலே பேராண்டி, ஒரு புத்தகம் வாங்கிட்டுப் போலாம் வாடா! “

No comments:

Post a Comment