http://www.nilacharal.com/ocms/log/06230815.asp
கள்ளிச் செடியில் மறைந்தவனைக் கசங்காமல் பிடிப்பேன்,
அரளிச் செடியில் மறைந்தவனை அள்ளி அணைப்பேன்,
தாமரைப் பூவில் தங்கியவனைத் தாவிப் பிடிப்பேன்,
ஓரிடமும் விடாமல் ஓடி வந்து ஒளிந்தவர்களை பிடிக்க வருகிறேன்.. வருகிறேன்..
எனக் கூவியவாறு மடமை தேடத் தொடங்கியது.
சோம்பல் அதன் குணத்திற்கேற்ப, ஓடி ஒளிய சோம்பல் பட்டு மடமையின் கால்களுக்கிடையே மறைந்திருந்ததனால் சோம்பலை முதலில் கண்டறிந்தது. பொய், புரட்டு என ஒவ்வொரு குணங்களையும் கண்டுபிடித்தாலும் கடைசி வரை காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. கவர்ச்சி களிப்புடன் மடத்தனத்தை பார்த்துக் கத்தியது, காதல் ரோஜாச் செடியில் ஒளிந்திருப்பதாக. மடமை மின்னலெனப் பாய்ந்து பார்க்கையில், காதலின் கண்களை ரோஜாவின் முட்கள் குத்தியிருக்க, கண்ணீருடன் காதல் நின்றது. அதன் பார்வையும் பறி போனது.
‘காச்..மூச்’ என்ற இந்த சத்தத்தில் கடவுள், குணங்கள் இருந்த அறைக்குள் வந்து நடந்ததை அறிந்து கொண்டார். காதலின் கண்பார்வை போக மடமையே காரணம், அதனால் காதலுடன் மடமை எப்போதும் இருக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
அப்போதிலிருந்து இப்போதுவரை காதலுக்குக் கண் இல்லை, மடமையைப் பிடித்த கைகளை விடுவதுமில்லை.
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment