Thursday, February 24, 2011

தேனீ வாழ்க்கைமுறை மற்றும் தொழில் வாய்ப்புக்கள்

தேள் போன்று கொட்டும் கொடுக்கினைக் கொண்ட இனம். ஆனால் கூடவே அமிர்தமெனத் தேனை நமக்களிக்கும் இனம். அதுதான் தேனீ இனம். அதைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாமா?




உலகிலேயே மிக உன்னதமான ஒரு உணவுப் பொருள் தேன். அது எவ்வளவு நாட்கள் வெளியில் வைத்திருந்தாலும் கெட்டுவிடாது. புளிக்காது. பூஞ்சக் காளான் பிடிக்காது. தேன் உணவுப் பொருள் மட்டுமல்ல. மருந்தும் கூட. குழந்தைக்கு ஜுரம். டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுக்கிறார். கூடவே சொல்கிறார், மாத்திரையை பொடி செய்து தேனில் கலந்து நாக்கில் தடவி விடுங்கள் என்று. குழந்தைகளை மாத்திரை விழுங்க வைப்பதே கஷ்டம் அதிலும் கசப்பு மாத்திரை என்றால் கேட்கவே வேண்டாம். டாக்டர் சொன்னபடி செய்வதில் இரண்டு சௌகரியங்கள். தேனின் தித்திப்பு மாத்திரையின் கசப்பை மறைத்து விடும். கூடவே தேனும் மருந்தாகும்.

புதிய ராணி வந்தவுடன் பழய ராணி பல நூறு வேலைக்காரர்களுடன் சில சோம்பேரிகளையும் அழைத்துக் கொண்டு புது வீடு தேடும் பணியில் ஈடுபடும். முதலில் அவை பழய வீட்டின் அருகிலேயே ஒரு மரத்தை அடைந்து அங்கு இளைப்பாரும். சில வேலையாட்கள் புது இடம் தேடும் பணியில் இறங்குவார்கள். வெளியில் சென்றவர்கள் திரும்ப வருவதற்குள் ராணீத் தேனீயையும் கொஞ்சம் வேலையாட்களையுமாக சேர்த்து ஒரு பெரிய கண்ணாடடி சோதனைக் குழாயை உபயோகித்துப் பிடித்து வலைத் துணியால் மூடி அதை அப்படியே ஒரு காலி தேனீ வளர்க்கும் பெட்டிக்குள் உதறி மூடி விட்டால் சிறிது நேரத்திற்குள் பெட்டியில் இருந்து சில வேலக்கார தேனீக்கள் வெளியே வந்து மற்ற்வர்களை அழைத்து வந்து விடும். ஒரு புதிய தேனீக் குடும்பம் உங்களுக்குக் கிடைக்கும். 

http://kalvithulir.com/index.php/e-learning/67-biology/453-honey-bee

No comments:

Post a Comment