என்ன பிள்ளைகளா,மதிய உணவு சாப்பிட்டீர்களா?’-டீச்சர்
”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.
இதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.
உடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .
இப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்!-இத்தனை நாள்.
இனியில்லை!
அழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது!
அரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா?
அல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா?
இல்லை!இல்லை!
கோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன?
அது தவிர இதனால் என்ன பயன்?அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன?
பின் எப்படி நடந்தது?
11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்!
29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 லட்சம்.
அதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்துதான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை
“எனக்குக் குழந்தைகள் இல்லை.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூறும் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது!
”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்!
மதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.
அந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.
தாயே!உங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்!
இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்
Thanks and Regards
http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_16.html
”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.
இதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.
உடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .
இப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்!-இத்தனை நாள்.
இனியில்லை!
அழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது!
அரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா?
அல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா?
இல்லை!இல்லை!
கோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன?
அது தவிர இதனால் என்ன பயன்?அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன?
பின் எப்படி நடந்தது?
11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்!
29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 லட்சம்.
அதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்துதான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை
“எனக்குக் குழந்தைகள் இல்லை.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூறும் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது!
”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்!
மதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.
அந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.
தாயே!உங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்!
இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்
Thanks and Regards
http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_16.html
No comments:
Post a Comment