ஒரு முறை அப்பாவின் பெட்டியைச் சுத்தம் செய்யும் பொழுது ஒரு பை எனக்கு கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தால் அதனுள் நாடக ஒப்பனையில் உபயோகப்படுத்தப்படும் சில ஒப்பனைப் பொருட்கள், கரையான் அரித்திருந்த பாஞ்சாலி சபதம் நாடகத்திற்கான பாடல்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகம் என சில என் கண்ணில் பட்டது. அந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் அதில் என் தந்தையின் கையெழுத்து. ஆச்சரியப்பட்டு என் அம்மாவிடம் கேட்க அது அப்பா எழுதியது என்றும் நானும் எனது அண்ணன்களும் பிறக்கும் முன்பு அது எழுதப்பட்டது என்றும் சொன்னார்கள். அப்பாவுடன் கலந்திருந்த மகாபாரத மோகமும் எனது மகாபாரதம் மீதான மோகத்திற்கு காரணமாக இருக்கலாம்.
Friday, February 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment