Showing posts with label Services by Kalvithulir. Show all posts
Showing posts with label Services by Kalvithulir. Show all posts

Friday, November 5, 2010

தீபத் திருநாளில் கல்வித் துளிரின் இனியதொரு தொடக்கம்

தானம் தரவே யோசிப்பவர்கள் பலர். சற்றே மனம் இளகியவரானால் தனக்கு பின்தான் தானம் தருமம் என்று சொல்பார்களும் உண்டு. தனக்கென சேர்த்துக் கொண்டே போகும் போது, பிறருக்கு கொடுக்கும் வாய்ப்பு வராமலே போகலாம்.


கேட்டவுடன் வாரி வழங்க விழையும் நல்மனம் கொண்டோர் கல்வித்துளிருக்கு கிடைத்திருப்பது எங்களின் பாக்கியம்.

பலரின் நன்கொடையாக எங்களின் தேவைக்கும் அதிகமான பணம் கடந்த மாதம் எங்களுக்கு வந்து சேர, எங்களின் தேவை போக மீதியை தேவைப்படுவோருக்கு தீபத் திருநாளில் கொடுத்திட விரும்பினோம்.

அதற்கென நாங்கள் தேர்ந்தெடுத்தது ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருக்கும் பாரதியார் மனம் நலம் குன்றியவர்களுக்கான இல்லம். 5 வயது குழந்தை சிந்திக் கொண்டே உண்டால்,
 கோபம் வரும் நமக்கு. மனம் சரியில்லாத 50 வயது குழந்தை சிந்தினால் பொறுமையாகச் சுத்தம் செய்யும் மனமுண்டா?

6 வயது முதல் 60 வயது வரையுள்ள 35 பேரை கவனிக்கும் பொறுமை நமச்சிவாயன் மற்றும் பணியாளர்களுக்கு உள்ளது.

35 பேருக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீர் கொடுத்திட,  தண்ணீரை சுத்தகரிக்கும் கருவி கல்வித்துளிர் சார்பில் மன நல காப்பகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

பீனிக்ஸ், அரிசோனாவைச் சேர்ந்த திரு & திருமதி. மணிகண்டன், திரு.&திருமதி. தசரத் மற்றும் பலரின் விரிந்த மனதால் எங்களின் இந்த முயற்சி சாத்தியமாகியுள்ளது.

எங்களின் முயற்சிக்கு உதவிய பலரில் தசரத் அவர்களின் நண்பர் திரு. பீரதீப் அவர்களும் ஒருவர். கல்வித்துளிரை பற்றி அணுவளவும் தெரியாத ஆந்திரத்து சகோதரர் அவர். நண்பர் தசரத் கல்வித்துளிரின் முயற்சியை கூறியதும், எங்களுடன் இணைந்தவருக்கு எங்களின் வணக்கங்கள்.

அடிப்படைத் தேவைகளுக்கு பணம் இருக்க, ஆடம்பர செலவில் ஒரு சிறு பகுதியை தேவைப்படுபவருக்கு கொடுத்து உதவ மனம் இருப்போர் நம்மில் எத்தனை பேர்?. அப்படியே தருவதாய் இருந்தாலும் யாரென்றே தெரியாதவருக்கு நண்பரின் வார்த்தைகளுக்காய் கொடுக்க மனம் இருப்போர் நம்மில் எத்தனை?.

கல்வித்துளிரால் இத்தகைய பொன்மனம் கொண்டவர்களை கண்டறிய முடிந்தது கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

தீபத் திருநாளில் துளிர் விட்ட இந்த முயற்சி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கல்விக்காக மட்டுமின்றி, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக துளிரும்.

Sunday, August 29, 2010

Deals2products.com - E-Commerce site from Kalvithulir Trust

Our past milestones were launched by unconditional donors of Kalvithulir trust. We always thankful to them and thought of giving more benefits apart from tax reduction receipt. That is how the idea of promoting ecommerce site came from Kalvithulir. Instead of donating money, if they buy their favourite products either way both will be benifited.

We named it as http://deals2products.com/  . We have millions of  products in the fields of Health, wellness, Home care, Body care, Beauty care Products. Also we have your  branded companies like Dell, Sears,Barnes and Nobles,Petco,Office Max in the Shop Section. All our products are organic and bio degradable.

We  look forward to helping you!

Monday, July 26, 2010

ஆசிரியர்கள் நியமனம்

பல தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. 8 வகுப்புக்கள் கொண்ட பள்ளிக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சிறு பகுதின்னு போட்டு ஒரு சில பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கின்றனர்.செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்வதைவிட, இது போன்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்திருக்கலாம். வாக்கு வேட்டைக்காக விமர்சையாக கொண்டாடப்பட்ட விழான்னுதான் எனக்குத் தோன்றுகிறது செம்மொழி மாநாட்டைப் பார்க்கையில்.

எங்கள் ஊர் பள்ளியிலும் ஆசிரியர் பற்றாக்குறை. பள்ளியின் நிலைமையை கூறியதும், வரி சலுகையின்றி பணம் தர என் நண்பர்கள் பலர் முன் வந்தனர். நண்பர்கள் தந்த நம்பிக்கையில் மூன்று ஆசிரியர்களை பணியமர்த்தி உள்ளோம். ஆசிரியர்களுக்கான முதல் மாத சம்பளத்தை திரு.சதீஷ் அவர்கள் தன்னுடைய அலுவலக நண்பர்கள் உதவியுடன் கொடுத்துள்ளார். திரு.சதீஷ் மற்றும் நண்பர்களுக்கு கல்விதுளிர் அறக்கட்டளையின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.