Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Friday, November 11, 2011

நிலாச்சோறு கதைகள் -ஒலி வடிவில்


கதை சொல்லி, சோறூட்ட இந்த அவசர உலகில் பெற்றோர்களுக்கு நேரமில்லை. கணினியில் கதை கேட்டு, கவளம் சோறு உங்கள் சுட்டிகள் உண்ண கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குங்கள்:


http://kalvithulir.com/index.php/stories/73-tamil-moral-stories-in-audio

Thursday, June 2, 2011

துயில் நாடகம் -திரெளபதி படினம்


பாண்டவர்கள் சூதாட்டத்தில் திரௌபதியை பணயமாக வைத்துத் துரியோதனனிடம் தோற்றப் பின், துரியோதனன் தன் தம்பி துச்சாதனனை திரௌபதி இருக்கும் அந்தபுரத்திற்கு அனுப்பி அவளை அரசவைக்கு அழைத்து வரச் சொன்னான். துரியோதனனின் கட்டளையை ஏற்று துச்சாதனன் அந்தபுரத்திற்குச் சென்று திரௌபதியை அரசவைக்கு வருமாறு கூப்பிடுகிறான். அப்போது...

Wednesday, March 2, 2011

நூலாடைக் கேட்ட கண்ணன்


பிருந்தாவனத்தில் ஜன்மாஷ்டமி உற்சவம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது .எல்லா
பக்தர்களும் அந்த அழகு கண்ணனுக்குப் புத்தாடைச் சார்த்தி மனம் மகிழ்ந்தனர்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர் .அவர் மனதில் தானும் அந்தக் கமலக்கண்ணனுக்கு ஒரு பட்டாடை அணுவித்து அழகுப்பார்க்க எண்ணினார் .

ஆனால் அன்றாடம் உஞ்சவிருத்தி  எடுத்து உண்ணும் அவருக்கு இது சாத்தியமா என்ன?. தன் மனைவியிடம் போய் இதைத்தெரிவித்தார் .

மனைவியோ
"என்ன பேசறேள்? இதெல்லாம் நமக்கு சாத்தியமா? அதான் அந்தக்கிருஷ்ணன்
எல்லா நாளும் புதுப்பட்டு தானே கட்டறான் !அவனுக்கு நாம செய்யலேன்னு
தான் குறையா என்ன?"

"அதில்லே.....வந்து எனக்குத்தான் அப்படி ஒரு ஆசை .சரி உங்கிட்ட இருக்கிற
பித்தளைப்பாத்திரத்தைக் கொண்டு வா"

Sunday, February 27, 2011

சுடலைமாடன் கதை


உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள்.

அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று சொல்லிப் புறப்பட்டார்.

ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள்.

எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப்
போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார்
எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன்
கைலாயம் திரும்பினார்.

உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும்
படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்..

"ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும்,
இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும்
அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன்.

"தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை..

"அதெப்படியாகும்?இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது  என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்" என்றார் இறைவன்.

"இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது"

"ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்"

"இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள்
அந்தக் குமிழைத் திறந்தாள்..

Friday, February 25, 2011

தேன் சிட்டு


பறவைகளைக் கூர்ந்து நோக்குதல் (bird watching) என்பது ஒரு ஆனந்தமான பொழுது போக்கு.
 காலை ஆறு மணிக்கு "கீ..வூ...கிக்வூ..கிக்வூ.." என்ற சத்தம் கேட்டு படுக்கை அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன். இரண்டு சிறிய குருவிகள் ஒன்றை ஒன்று துரத்தியவாறு பறந்து கொண்டிருக்கின்றன தோட்டத்தில் உள்ள ஒரு செம்பருத்திச் செடியின் கிளைகளின் ஊடே.

சற்று நேரத்துக்குப் பின் அவை தனது நீண்டு வளைந்த அலகு மற்றும் குழாய் போன்ற நாக்கைக் கொண்டும் செம்பருத்திப் பூவிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன

Thursday, February 24, 2011

தேனீ வாழ்க்கைமுறை மற்றும் தொழில் வாய்ப்புக்கள்

தேள் போன்று கொட்டும் கொடுக்கினைக் கொண்ட இனம். ஆனால் கூடவே அமிர்தமெனத் தேனை நமக்களிக்கும் இனம். அதுதான் தேனீ இனம். அதைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாமா?




உலகிலேயே மிக உன்னதமான ஒரு உணவுப் பொருள் தேன். அது எவ்வளவு நாட்கள் வெளியில் வைத்திருந்தாலும் கெட்டுவிடாது. புளிக்காது. பூஞ்சக் காளான் பிடிக்காது. தேன் உணவுப் பொருள் மட்டுமல்ல. மருந்தும் கூட. குழந்தைக்கு ஜுரம். டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுக்கிறார். கூடவே சொல்கிறார், மாத்திரையை பொடி செய்து தேனில் கலந்து நாக்கில் தடவி விடுங்கள் என்று. குழந்தைகளை மாத்திரை விழுங்க வைப்பதே கஷ்டம் அதிலும் கசப்பு மாத்திரை என்றால் கேட்கவே வேண்டாம். டாக்டர் சொன்னபடி செய்வதில் இரண்டு சௌகரியங்கள். தேனின் தித்திப்பு மாத்திரையின் கசப்பை மறைத்து விடும். கூடவே தேனும் மருந்தாகும்.

புதிய ராணி வந்தவுடன் பழய ராணி பல நூறு வேலைக்காரர்களுடன் சில சோம்பேரிகளையும் அழைத்துக் கொண்டு புது வீடு தேடும் பணியில் ஈடுபடும். முதலில் அவை பழய வீட்டின் அருகிலேயே ஒரு மரத்தை அடைந்து அங்கு இளைப்பாரும். சில வேலையாட்கள் புது இடம் தேடும் பணியில் இறங்குவார்கள். வெளியில் சென்றவர்கள் திரும்ப வருவதற்குள் ராணீத் தேனீயையும் கொஞ்சம் வேலையாட்களையுமாக சேர்த்து ஒரு பெரிய கண்ணாடடி சோதனைக் குழாயை உபயோகித்துப் பிடித்து வலைத் துணியால் மூடி அதை அப்படியே ஒரு காலி தேனீ வளர்க்கும் பெட்டிக்குள் உதறி மூடி விட்டால் சிறிது நேரத்திற்குள் பெட்டியில் இருந்து சில வேலக்கார தேனீக்கள் வெளியே வந்து மற்ற்வர்களை அழைத்து வந்து விடும். ஒரு புதிய தேனீக் குடும்பம் உங்களுக்குக் கிடைக்கும். 

http://kalvithulir.com/index.php/e-learning/67-biology/453-honey-bee

Friday, February 4, 2011

பைந்தமிழில் மகாபாரதம் - முன்னுரை


ஒரு முறை அப்பாவின் பெட்டியைச் சுத்தம் செய்யும் பொழுது ஒரு பை எனக்கு கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தால் அதனுள் நாடக ஒப்பனையில் உபயோகப்படுத்தப்படும் சில ஒப்பனைப் பொருட்கள், கரையான் அரித்திருந்த பாஞ்சாலி சபதம் நாடகத்திற்கான பாடல்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகம் என சில என் கண்ணில் பட்டது. அந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் அதில் என் தந்தையின் கையெழுத்து. ஆச்சரியப்பட்டு என் அம்மாவிடம் கேட்க அது அப்பா எழுதியது என்றும் நானும் எனது அண்ணன்களும் பிறக்கும் முன்பு அது எழுதப்பட்டது என்றும் சொன்னார்கள். அப்பாவுடன் கலந்திருந்த மகாபாரத மோகமும் எனது மகாபாரதம் மீதான மோகத்திற்கு காரணமாக இருக்கலாம்.

Friday, January 14, 2011

Maths in Seconds - விரல்களுக்குள் கணக்கு



லிருந்து 10 வரையிலான எண்களின் பெருக்கல் :
எடுத்துக்காட்டு = 9 x 7
செய்முறை :
1]வலப் பக்க 10 விரல்கள் (கால் 5 விரல்கள், கை 5 விரல்கள்) ஒரு இணையாகவும், இடப்பக்க 10 விரல்கள் ஒரு இணையாகவும் கொள்ளவும் .
2]முதல் எண்ணை (9) விரல்களில் ஒரு பக்கமாக எடுக்கவும்
காலில் 5 + கையில் 4  ( 4 நேராக, 1 மடக்கிய நிலையில்)

Wednesday, October 13, 2010

கொலு‌வி‌ல் ஒன்பது படிகள் அமை‌ப்பத‌ன் நோ‌க்க‌ம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம்.


Read More...
http://kalvithulir.com/index.php/articles/35-general/223-navarathri-kolu